தோட்டதில் ஆதாம் ஏவாளுடன் க‌டவுளும் இருந்தார்.
மனிதன் கவலையில்லாமல் இருந்தான்.
கடவுளை விட்டு மனிதன் அறிவைத் தேட‌
மனிதனை விட்டு விலக ஆரம்பித்தார்- கடவுள்

அது மனிதன் மனமற்று இருந்த வேளை
கடவுள் உயிர்களைப் படைத்தான்
மனிதன் அதற்கு பெயர் வைத்தான்
வெறுத்துப்போய் இன்னும் விலகினார்- கடவுள்

இருளைப் படைத்த கடவுள் கண்சிமிட்டும் முன்
விளக்கோடு வந்தான் மனிதன்
மனிதனின் தேடல் ஆரம்பித்தது
தலையில் அடித்துக் கொண்டு தள்ளிபோனார் - கடவுள்

மரபை விடமுடியாமல் திணறி
ஒதுங்கியிருந்த சாத்தானின் பேரிலே
தன் குறிப்புகளை ஏற்றினான். எல்லை மீறியதால்
கண்டுகொள்ளாமல் போனார்- கடவுள்.

இருவரும் இடங்களை மாற்றிக் கொண்டனர்.
கடவுளுக்கு மனிதன் தேவை குறைந்தது
மனிதனுக்கு கடவுளின் தேவை அதிகமானது.
இயலாமல் நின்றார்- கடவுள்

கடவுள் படைத்த அனைத்தயும் வென்றான்
தேடல் அதிகமாக அதிகமாக பயம் வந்தது
க‌டவுளை மறுபடியும் தேடினான்
பயந்து போனார் -கடவுள்

பயந்த கடவுள் யோசித்தார்
தன் பெயரால் போர் செய்த மனிதன்
தேடாத‌ இடம் எதுவென்று-
ச‌ட்டென்று அவன் மனதில் சென்றமர்ந்தார் - கடவுள்

இன்னமும் மனிதன் க‌டவுளை
வெளியே தேடிக் கொண்டிருக்கிறான்.
 அதனால் தான் அவருக்குப் பெயர்
கட-உள்