சில குறிப்புகள்
மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி!
----------------------------------------------------
இந்தியாவில் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனிதர்.
காந்தி இப்போது 500 ரூபாய் நோட்டில் சிரிப்பதற்கும் ஒரு நாள் லீவுக்கும் மட்டும் தான் பயன்படுகிறார். இப்போதுள்ள தலைவர்களுடன் அவரை ஒப்பிடுங்கள். சுபாஷ் சந்திரபோஸ் வழி வேறு, காந்தி வழி வேறு. வன்முறை பாதையில் நாம் எதையும் பெற முடியாது. காந்தி விமர்சனத்திர்கு அப்பாற் பட்டவர் அல்லர். ஆனால் பின்பற்றத் தக்கவர். 1948ல் சிதையில் ஏற்றப்பட்டது காந்தியின் உடல் மட்டுமல்ல. அவரது கொள்கையும் தான்.
நள்ளிரவில் சுதந்திரம் என்று ஒரு புத்தகம் இருக்கிறது. இந்திய சுதந்திரத்தைப் பற்றி வந்துள்ள புத்தகங்களில் மிகச் சிறந்தது. ஆசிரியர்கள்:- டொமினிக் லேப்பியர் மற்றும் லேரி காலின்ஸ். படித்துப் பாருங்கள்.
கம்யூனிஸ்ட்
----------------------
நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள்.
ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன்.
என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்
Dom Hélder Pessoa Câmara
உலகின் மிகப் பெரிய முதலாளித்துவ நாட்டில் பார்த்த சில நிகழ்வுகள் எனக்கு கம்யுனிசத்தின்மேல் ஈடுபாட்டை கொடுத்துள்ளது. ந்மது இந்தியாவும் அதே பாதையில் செல்கிறது. மெத்தப் படித்த மேதாவி மன்மோகனும், செட்டி நாட்டிச் சீமான் சீனா தானாவும் 91 ல் நரசிம்ம ராவுடன் சேர்ந்து உலகமயமாக்கல் என்று ஏதோ புரியாத விஷயங்களிச் செய்தார்கள். இப்போது பணவீக்கம் 12% என்கிறார்கள். படிக்காத காமராஜின் தொலை நோக்குப் பார்வையும் 18 டாக்டரேட் வைத்துள்ள மக்கு மோகனின் ஒப்பிடுதல், பெருந்தலைவருக்கு அசிங்கம்.
நமது நாடும் ஒரு வித பொருளாதார திடமற்ற தன்மையினை நோக்கி போகிறது. பெருமுதலாளிகளின் பிடியில் எல்லாத் தொழிலும் போகும்போது. இரத்தம் ஒரே நிறமாகத் தோன்றாது.
விஜயதசமி
--------------------
சின்ன வயதில் விஜயதசமி மற்றும் ஆயுதபூஜை என்பது மிகவும் சந்தோஷமான பண்டிகை. தீபாவளின் ஆரம்ப ஜோர் தெரிய ஆரம்பிக்கும் வாரம். பக்கத்து ஐயங்கார் வீட்டில் கொலு வைப்பார்கள். மற்ற சமயங்களில் ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு ஐயங்காருக்கு மூன்று கொம்பு என்று பாடி அவரது பசங்களை கிண்டல் செய்தாலும், கொலுவிற்கு போகும் போது சினேகமாக இருப்பார்கள். தீபாவளி களைகட்ட ஆரம்பிக்கும்.பட்டாசுக் கடைகள் ஆரம்பிப்பார்கள். எல்லா கடைகளிலும் பொறி பொட்டுக் கடலை, சுண்டல் தருவார்கள்.
பிற்காலத்தில் திருச்சியில் படித்த போது ஆயுதபூஜை முதல் தீபாவளி வரை NSP ரோட்டில் அலைவோம். சாரதாஸ் வாசலில் காலை 8 மணி முதல் க்யூவில் மக்கள் நின்று கொண்டிருப்பார்கள். அன்றுதான் BHEL-ல் போனஸ் தருவார்கள்.
இப்போதெல்லாம், சாலமன் பாப்பையாவும் ( இவர் சன் டீவி வாசலில் படுத்துக் கொண்டிருப்பார் போல, 15 வருடங்களாக ஒரே முகம், ஒரே வித்மான பேச்சு), இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன..என்று போகிறது.
கடந்த சில வருடங்களாக. வெளி நாட்டில், சுண்டல், பொரியை பேப்பரில் எழுதிப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
வேதிக் டெம்பிள் @ ரெட்மாண்ட்
-------------------------------------------------------
மனைவியின் வேண்டுதலுக்காக பக்கத்தில் இருக்கும் வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்றோம். மைக்ரோசாப்ட்டில் வேலை செய்யும் சிலரால் ஆரம்பிக்கப் பட்டு நிர்வகிக்கப்படுகிறது. ஓரு சில நடுத்தர வயது ஐயர்கள் பஞ்ச கச்சத்துடன் லேசான குடுமி மற்றும் தாடியுடன் இருந்தனர். சில ஸ்லோகங்கள் வாசித்தார்கள். சிலர் ஐ-பாட் அல்லது ஐ-போனிலும் சிலர் கிண்டில் ரீடரிலும் பார்த்து லலிதா ஸகஸ்கர நாம்மும் , செளந்தர்ய லஹரியும் சொன்னார்கள். பொதுவாக எல்லோரது முகத்திலும் ஒருவித LSD மஹிமை தெரிந்தது. பிரசாதம் என்ற பெயரில் டின்னர் தந்தார்கள். டெக்னாலஜி என்ற பெயரில் வெங்கி காதில் ஐ-பாட் மாட்டாமல் இருந்தால் சரி.
அவர்களது கையில் இருந்த பெளதீக விஷயங்களைப் பார்த்த பின்னர், எனக்கு வைதீக காரியங்களில் நம்பிக்கை வரவில்லை.
என்னால் தண்டிக்கும் தயை காட்டும் கடவுளை நம்ப முடியவில்லை. பிரபஞ்சத்தின் ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் கடவுள் தேவைப் படுகிறார்.