சின்ன வயதில் உக்கார்ந்த இடத்தில் இருந்து அம்மவைப் படுத்தி இம்சிக்கும் போது, எல்லாருக்கும் ஏதாவது நோய்வந்து படுப்பார்கள் எனக்கு மட்டும் எதுவும் வந்து தொலைக்க மாட்டிக்குது. ஒரு நாள் கூட ஓயிவு இல்லை என்பாள். அறுபத்து நான்கு வயதனாலும் ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்காமல் சுறுசுருப்பாக இருப்பாள். சிலபேர் வரம் வாங்கி வந்திருப்பார்கள் என் அம்மாவும் அப்படித்தான்.

சமயல் வேலைகளை முடித்துவிட்டு பதினோரு மணிக்கு தட்டில் சாப்பாட்டைக் வைத்துக் கொண்டு எதாவது புத்தகத்துடன் மெதுவாக சாப்பிட்டுக் கொண்டே படிப்பாள். ஓஷோவிலிருந்து சுஜாதா, கம்பியுட்டர் என்று அவளது தேடல் விஸ்தாரமானது.

கல்யாணமாகி ரொம்ப வருஷங்கள் குடும்பத்தாரை எதிர்த்துப் பேசாமல் ஒரு இன்ரோவர்ட்டாக இருந்தாள். பின்னர் ஆம்பிவெர்ட்டாகவும் எக்ஸ்ரோவெர்ட்டாக என்று காலதோடு மாறியவள். நாங்களெல்லாம் வளர்ந்து விட்ட போது அம்மா பேசத.. என்று அடக்குவோம்.

ஊரே மாமி என்று கூப்பிடும். யாரோடும் சண்டை போட மாட்டாள். அவளது கையால் சாப்பிடாத குழந்தைகள் எங்கள் தெருவில் கிடையாது. காலையில் என்ன டிபனாக இருந்தாலும் முதலில் குழந்தைகளுக் கொடுப்பாள்.

எங்கோ கொல்லிமலை அடிவாரத்தில் பிறந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஆலங்குடி என்ற கிராமத்தில் வாழ்ந்தாள். முதல் முதலில் அமெரிக்கா வந்தபோது மிகவும் இளைத்து இருந்தாள். ஸ்பேஸ் நீடில் மேல் சென்றபோது கண்களில் நீர்வர உன்னைப் பெற்ற பயனை நான் அடைந்தேன் என்றாள்.

ஒரு நாள் திடீரென்று அம்மாவை வேலூரில் சேர்த்தோம். சிஸ்டமிக் ஸ்கெலரோ டெர்மா என்றார்கள். கோடியில் ஒருவருக்கு வரும் என்றார்கள். அவள் கோடிப் பேரில் ஒருத்திதான். பேச முடியவில்லை அவளால். மெல்லச் சொன்னாள் பேசாத பேசாதன்னு சொன்ன... முடியலடா... உடைந்து போனோம்.

அவளுக்கு பொதுவாக தன்னம்பிக்கை அதிகம். ஆனால் அன்று நம்பிக்கை குறைந்த்து போல.. சட்டென்று விட்டுப்போனாள். ஊரே அழுதது. ரோஜாக்களுக்கு நடுவே அவளைக் எடுத்துச் சென்றபோது அப்பா என் தேவதையே என்ன விட்டுட்டுப் போரியே என்று அழுதபோது தேற்றிய யாரோ சொன்னார்.. சாமி தேவதைகள் பிறப்பது இல்லை இறப்ப‌தும் இல்லை.. சில சமயம் பூமிக்கு வந்து செல்வதுண்டு...

(இந்தப் படம் எடுக்கப்பட்டதிலிருந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதே நாளில் என் அம்மா பூமியை விட்டுச் சென்றார்).


R. வசந்தா தேவி

பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை 17/08/1947 க்கும் 17/08/2010 க்கும் இடையே பூமிக்கு விஜயம் செய்தார்

1 comments:

unmai thaan......sila pera namala maranthuthu valnthuda mudiyathu...

I am happy naan avungaloda samayala saapitu irrukenu....

Post a Comment