சில குறிப்புகள் - 24/12/2011

ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு பதிவு

முதலில் கிருஸ்த்துமஸ் வாழ்த்துக்கள்

Dear friend, I pray that you may enjoy good health and that all may go well with you, even as your soul is getting along well.”
III John 1:2

கவியரசரின் ஏசு காவியம் படித்த பின் எனக்கு கிருஸ்துவின் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது. ஏசு அவரது சொந்த சீடர்களாலேயே தவறாகப் புரிந்து கொள்ள‌ப்பட்டவர். அகிம்சையின் பெயரால் வாடிக்கன் செய்த பாவங்கள் பல. கிருஸ்த்துவின் பெயராலே வேட்டையாடப் பட்ட நாடுகளும் இனங்களும் பல. ஏசு 33 வயதில் மரித்தார். அவர் 86 வயது வரை வாழ்ந்ததாக கூறுவோரும் உண்டு. அவரது கருத்துக்கள் மறக்கப்பட்டன.

இந்த நல்ல நாளில், உண்மையான அகிம்சையையும், கிருஸ்துவின் மேன்மையையும் போற்றுவோம்.

ஓ1 தேவ மண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, நீ உனது தூதனை மறுபடியும் அனுப்பி வையும். அவரது தேவை முன்னெப்பவும் விட இப்போது தான் தேவை.

முல்லைப் பெரியாறு

நம்ம இனமான ராசா நம்மளயெல்லாம் குடத்துடன் போராட்டத்திற்கு கூப்பிடிருக்கிறார். அவர் படம் ஆரம்பித்தாச்சு.
அண்ணே ஒரு டவுட்டு, ஒங்க பட ஹீரோயினி யாருண்ணே? கொடத்தோட சென்னையில் மறித்து என்ன அண்ணே யூஸ்?
தேனி ஒங்க ஊருதானே. அங்க போயி புங்க வேண்டியது தானே? இப்புடித்தான், நெயிவேலிக்குப் போன நீ, என்ன புண்ணியம்?  வைகோ மாதிரி பாடர்ல போயி போரட வேண்டியது தானண்ணே. இல்லாட்டி தெம்பு இருந்தா இந்த பிரச்சனைக்கு சப்போர்ட் பண்ணி உங்க படத்திலிருந்து அந்த ரெண்டு கேரள நடிகைகளை நீக்க வேண்டியது தானண்ணே. இப்படிப் பேசியே ஈழத்தமிழனையிம், காவிரிப் பிரச்சனையையும் தீத்துட்டிங்க, இப்ப முல்லைப் பெரியாறு,  ஆமால்ல உங்க படம் ஆரம்பிச்சாச்சுல்ல. கொஞ்ச நாளைக்கு ஆட்டம் பலமாத்தான் இருக்கும்.

சேட்டன்கள்

சேட்டன்க மயிரக்கூட நம்மால புடுங்க முடியாது. என்னா, அவன் டெல்லீல எல்லா துறைகளிலும் இருக்கான்.

ரயில்வேத் துறையில் இருந்து, வெளியுறவுத்துறை என்று சேட்டன்கள் ஆட்சி தான். நாம, திராவிடன் மட்டையின்னு பேசி பேசியே அழிவோம். போயி புள்ளகுட்டியா படிக்கவைங்கப்பா..

நித்தி

நம்ம நித்தி மறுபடி ஆரம்பிச்சுட்டார் போல.. 500 புரியார் வந்தாலும், ஹும்.. நாம மாறமாட்டோம். யாரவது இவருக்கு மணிகட்டுங்கப்பா..சாரி, அவருக்கு மணி தேவையில்லை.