எனக்கு சிவப்பு விளக்கைப் பார்த்தாலே ஒரு வித பத‌ட்டம் வந்துவிடும். சின்ன வயதிலிருந்தே சொல்லப்பட்ட அல்லது படித்து தெரிந்துகொண்ட சிவப்பு விளக்கு பற்றிய எச்சரிக்கை, சிவப்பு விளக்கை பார்க்கும்போதெல்லாம், அடி வயிறில் லேசாக அட்ரினலின் ஊறும். ஒரு மெல்லிய பதட்டம் வ‌ரும்.

தினசரி பேப்பரைப் பார்த்தால், சின்ன பத்தியில் செய்திகள் இருக்கும். யாரவது ஒருவர் வாழ்கையை தொலைத்தார் என்று.
சிவப்பு ஒரு நல்ல கலர். ஆனால், சமூகம் அதை எச்சரிக்கைக்கு அதிகமாக பயன்படுத்துகிறது.

கொஞ்சம் வயதான பின்பு, சிவப்பு ஒரு அட்ராக்டிவ் கலர் என்ற நினைப்பு வந்தது. சிவப்பு ஒரு எச்சரிக்கை என்பதை ஏன் மீறக்கூடாது என்ற எண்ணம் வந்தது. ஏனென்றால், இந்த சிவப்பு விளக்கு இப்போது தெருவிற்குத் தெரு வந்து விட்டது.
வயதுக் கோளாறு வேறு.

அழகான பெண்கள், சிவப்பு விளக்குக்கு அருகில் நிற்கும்போது, மனது சஞ்சலபடும். சற்று நேரம் நின்று யோசித்தாலும், விளக்கிற்கு கீழே நிற்கும் மாமாவைப் பார்த்தால், லேசாக பயம் வரும். எனக்கு விபரம் தெரிந்த நாட்களிலிருந்து,
மாமாக்களுக்கு பெரிய தொப்பையும்,  மீசையும் உண்டு.

அதோடு அவர்கள் விடும் மிரட்டலுக்காகவும்,  அவர்களது குரலும், சிலநேரங்களில் அடாவடித்தனமும்........ எத்தனையோ முறை சிவப்பு விளக்கிற்கு முன்னால் நின்றுவிட்டு, கொஞ்சம் நேரம் யோசித்துச் சென்றதுண்டு.

ஒரு நாள் எதோ அவசரத்தில் சிவப்பு விளக்கு எச்சரிக்கையையும் மீறிச் சென்றபோது அங்கே நின்ற மாமா என் பைக்கை மறித்து சாவியை பிடுங்கிக் கொண்டார். அப்புறம் அங்கிருந்த பெரிய மாமாவைப் பார்த்து கப்பம் கட்டி விட்டு வருவதற்குள்,  நாக்கு தள்ளிவிட்டது.

நான் சொல்லும் சிவப்பு விளக்கு தெருவிற்குத் தெரு இருக்கும் ட்ராஃபிக் லைட். நீங்கலள் வேரு ஏதாவதை நினைத்துக் கொண்டால் அதற்கு அட்டியேன் பொறுப்பு இல்லை.

ஆனாலும் சிவப்பு என்றால்.... எச்சரிக்கை தான்.. ரோட்டில் மட்டுமல்ல.....

Save as Draft


ஏழெட்டு வருடங்களுக்கு முன்னாடி கோவையில் வேலை பார்த்க்கொண்டிருந்தோம். நாங்க 3 காலேஜ் நண்பர்கள் இன்னோரு நண்பர்.  சனிக்கிழமை ஆனா,  மாலை காந்திபுரம் அருகே இருக்கும் அடையார் ஆனந்தபவனில் சாப்பிட நாங்களும் வாரம் தவராது போவோம்.


நம்ம காலேஜ் நண்பர் வீட்டில் ஒரு நாய் வளர்த்தார்கள். கிட்டத்தட்ட அதுக்கு 16 வயசு இருக்கும். அதுக்கு சொத்துல பங்கு தரும் அள‌வுக்கு அந்த நாய் மேல பாசம். வராவாரம் நம்ம நண்ப‌னும் நாய்க்கு ரஸகுல்லா வாங்கிட்டுப்போவான். அவன் வேலைக்கு வந்த புதிதில் முதல் சம்பளத்தில் நாய்க்கு பெல்ட் வாங்கிக் கொடுத்தான். அவ்வளவு பாசம்.


அந்த நாயி நம்ம நண்பன் கல்யாணத்த பாக்காம டிக்கெட் வாங்கிடப்போகுதுன்னு நண்பனோட அப்பாவுக்கு ஒரே கவலை.
அது வரவர வீக்காகுதுன்னு புல‌ம்புவார். ஒரு வெட்னரி டாக்டர் வந்து பார்த்து விட்டு, சார், நாய்க்கு இதயம் பலவீனமாக இருக்கு, பையன் கல்யாணத்தைப்பத்தி நாய் முன்னாடி பேசாதிங்கன்னு சொல்லிட்டுப் போனார். 


ஒரு சனிக்கிழமை மாலை வழக்கம்போல நாங்க அடயார் ஆன‌ந்த பவனில் இருந்தோம். நம்ம நண்பருக்கு அவர் தம்பி கால் செய்து, டேய், நம்ம சொந்தக்காரர் ஒருத்தர் டிக்கெட் வாங்கிட்டார்டா என்றான். நண்பரும் அப்டியாடான்னு சொல்லிட்டு, ஒரு ரசகுல்லா வாங்கி சாப்பிட்டுவிட்டு, எங்களோடு படம் பார்க்க வந்த்தார், அப்புறமா லேட் நைட் கிளம்பிப்போனார்.


இது நடந்து இரண்டு மாதத்திற்குப் பிறகு, ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை நாங்க ஒரு டீ கடையில் நின்று கொன்டிருந்தோம். நம்ம நண்பருக்கு அவர் தம்பி போன் செய்து, டே நம்ம தங்கம் போய்ட்டாண்டானு கததினான், கையில் இருந்த டீ கிளாஸ் மேலே பறக்க நம்ம நண்பர், சிவனந்தா காலணி பஸ் ஸ்டாப்ல உருண்டு புரண்டு அழுதார். உடனே பஸ் புடிச்சுப் போனவர், மூன்று நாள் கழித்து கண்கள் சிவந்து சோகமாக வந்தார். 


அவரது அப்பா,  கடந்த ஏழு வருடங்களாக, தங்கத்திற்கு நினைவு நாள் அனுசரிக்கிறார். 


சமீபதில் அவரது திருமணத்திற்காக அவர் வீட்டிற்குச் சென்றபோது.. தங்கம் அவர் வீட்டு ஹாலில், சீரியல் செட் போடப்பட்ட பெரிய படத்தில் சிரித்துக் கொண்டிருந்தது. 


என்னால் சில மனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.... 


எங்க அம்மா எனக்கு ஒரு சாபம் கொடுத்திருக்காங்க.. நீ கை நிறைய சம்பாதிப ஆனா வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்காது. ஏன்னா அவ்வளவு அட்டூழியம் செஞ்சுருக்கேன்.

அம்மா சமையல் எப்போதும் நல்லா இருக்கும் சும்மா வம்பிழுக்க நாங்க எப்போதும் குறை சொல்வோம்.

ஒரு நாள் கல்யாணம் ஆன பொழுதில் என்னையும் என் மனைவியையும் சென்னையில் விட்டு விட்டு என் பெற்றோர் என் சொந்த ஊருக்குப் போய்ட்டாங்க. எனக்கு ரெண்டு நாளாக ஒரே ஜுரம். என் மனைவியோ அன்னைக்குதான் மொத த‌பா ரசம் வைக்கவா கணவரே என்றாள். அவள் என்னை அப்படித்தான் கூப்ப்டுவாள். நானும் ஜுர  வேகத்தில் சரிம்மா என்றேன். வெச்சத்துக்கு அப்புறம் தான் தெரிந்தது அது ரசம் இல்லை விஷம் என்று.

நீதி : அரசன் அன்று கொல்வான். மனைவி ரசம் வைத்துக் கொல்வாள்.

விதி அப்படியெ விட்டுச்சான்னா இல்லை...

அன்று மாலை நண்பர் ஒருவர்,  மைலாப்பூர் ஷாப்பிங் போலாமாடான்னு கேட்டார், சரின்னு குடும்பத்தோடு எல்லோரும் போனோம். ஷாப்பிங் முடிந்து பக்கதுல இருந்த சரவண பவன்ல சாப்பிடப்போனோம். நண்பரின் மனைவி சென்னையில் பிறந்து வளர்ந்தவர், அதனால் அவர் எனக்கு full meals-னு முடித்து விட்டார்.

ஆனா நாங்க காட்டுப்பக்கதுல இருந்து வந்தவங்க, கொலபசிவேற, அதனால மெனுல 7 ஸ்டார் ஊத்தப்பம்னு ஒர் ஐட்டம் இருந்துச்சு, 50 அல்லது 60  ருவா இருக்கும். கிராமத்துல, 10 ருவா தோசையே நல்லா பெருசா கிளின்ட் ஈஸ்ட்வுட் தொப்பி சைசுக்கு இருக்கும். சரி ஒரே கல்லுல 7 மாங்கானு நெனைச்சுகிட்டு 7 ஸ்டார் ஊத்தப்பம் ஆர்டர் பண்ணினேன்.

சரவணபவன்ல 5 சர்வர்ருக்கு 15 சூப்ரவைசர் இருக்காங்க. தண்ணியே 20 நிமிஷத்துக்கப்புறமா தான் வந்துச்சு. எல்லாரும் பரபரன்னு இருந்தாங்க, ஆனா ஒண்ணும் நகரல (இவங்கக்கிட்ட தான் கத்துக்கனும்). 35 நிமிஷத்துக்கு அப்புறம், நம்ம 7 ஸ்டார் ஊத்தப்பம் வந்துச்சு. முக்காவாசி தபா நம்ம Appraisal paper மாதிரி எக்ஸ்பெக்டேஷன் ஆனா. ..த்தா 7 பழைய ஒரு ரூபா காசு சைசுக்கு ஊத்தப்பம் அது மேல காக்கா எச்சம் மாதிரி கொஞ்சம் சட்னி,

ஃபுல் மீல்ஸ் ஆர்டர் பண்ண நண்பர் மனைவி.. நான் ஸ்டாப்பா சிரிச்சாங்க.. சில சமயம் சுற்றத்தைப் பார்த்துவிட்டு சாப்பிட்டால் தப்பே இல்லை.

அப்புறம் வெளிய வந்து, கையேந்தி பவன்ல ஃபுல் கட்டு கட்டினேன்.

என்னவோ எனக்கும் சரவணபவனுக்கும் இதுவரை செட் ஆகவே இல்லை. ஒரே ஒரு முறை கனடாவின் வான்கூவர் நகரில் மட்டும் கொஞ்சம் சுமாரா இருந்தது. அதுவும் பொண்டாட்டி சமயல ஒரு வருஷம் சாப்பிட்டுவிட்டு அங்கே போனதால....

எங்கம்மா நெஜமாவே சாபம் கொடுத்திருக்காங்க...




அவன் எப்போதும் தனிமையாக இருப்பான். நண்பர்கள் மிகக்குறைவு. லேசான பெண்தன்மையும் சற்றே தடித்த உருவமும் கொண்டவன். எங்க செட்ல அரும்பு மீசை முளைத்த மொத‌ பையன்.

வெள்ளை நிற சட்டைக்குக் கீழே நீல நிற பனியன் எப்போதும் வெளியே தெரியும்படி அணிந்து வருவான். எல்லோரும் மஞ்சள் பையில் புத்தகங்களைக் கொண்டு வருவோம். அவன் மட்டும் ஒயர் கூடையில் கொண்டு வருவான். மிக நன்றாகப் படிப்பான். கையெழுத்து மிக அழகாக இருக்கும். வீடு விட்டால் ஸ்கூல், ஸ்கூல் விட்டால் வீடு. அவனை வேறு எங்கும் பார்க்க முடியாது.

அவன் வெகுளியா இல்லையா என்று தரம் பிரிக்கத்தெரியவில்லை. ஆனால் எங்கள் பள்ளியில் அவனை எல்லோருக்கும் பிடிக்கும். எங்க ஊரில் இரண்டு ஆரம்பப் பள்ளிகள். ஒன்று ஆர். சி பள்ளி மற்றொன்று அரசு தொடக்கப்பள்ளி. ஆர்.சி பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் புத்திசாலிகள் என்ற அபிப்பிராயம் எல்லோருக்கும் உண்டு. நாங்களெல்லாம் இரண்டாம் தர குடிமக்கள். இந்த இருவரும் அரசு பொது உயர்நிலைப் பள்ளிக்கு 9 முதல் 12 வரை படிக்க வர வேண்டும். அது ஒரு கடல்.

நான் முதலில் 9ம் வகுப்பு அடியெடுத்து வைக்கும் போது, இந்த பேதம் முதல் நாளே தெரிந்தது.  எங்கெல்லாம் பேதமும் வர்கமும் இருக்கிற‌தோ அங்கெல்லாம் ஒரு தலைவன் உருவாக்கப்படுவான். எங்களைப் போன்ற கடை நிலை மாணவருக்கு அவன் எப்போதும் துணை நின்றான். ஆர்.சி vs அரசு மாணவர்களிடையே அவன் நடுநிலையாளனாக இருந்தான். என் முதல் நண்பனும் அவன் தான்.

ஒரு நாள் இன்னொரு பையன் அவனை கெட்ட வார்த்தை சொல்லி திட்டிவிட்டான். நம்ம நண்பன் ஆசிரியரிடம் சென்று சார் பழனியப்பன் என்னைய‌ கெட்ட வார்த்தை சொல்லி திட்றான் சார் என்றான். அந்த ஆசிரியரோ உண்மையில் ஆ-சிறியர். அவர் என்னடா சொல்லி திட்டினான் என்றார். இவன் திரும்பத் திரும்ப கெட்டவார்த்தை சார் என்றான்.  அவரும் விடுவதாக இல்லை.

கொஞ்சம் நேரத்தில் கடுப்பான நம்ம நண்பன்  ******* சார்னு வெகுளியாகச்சொல்லி அடிவாங்கினான்.

இப்படிப்பட்ட introvert மனநிலை கொண்ட நண்பனிடம் நல்ல ஆளுமை இருந்தது.

நாட்கள் உருள,  நாங்கள் பத்தாம் கிளாசில் அடி வைத்தோம். என்போன்ற கடைநிலை மாணவர்கள் எவ்வளவோ அவமானங்களை சந்தித்தாலும், அவன் சிரித்த முகத்தோடு சொல்லுவான், பங்காளி, யார் என்ன சொன்னாலும் முயற்சியைமட்டும் விட்றாதடா!

நாங்க எல்லோரும் பத்தாவது தேறினோம். ஒரு நாள் அவன் எங்க‌ளை பிரிந்து சென்றான்.  எங்கோ அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் அவன் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கடந்த 20 வருடங்களில் நான் பார்த்த மிக வித்யாசமான மனிதர்களில் நண்பரும் ஒருவர்.

நான் எவ்வளவோ தேடியும் அவனை தொடர்புகொள்ள முடியவில்லை.

ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள்  மட்டும் நினைவில் உள்ளது
பங்காளி, யார் என்ன சொன்னாலும் முயற்சியைமட்டும் விட்றாதடா!

நடராஜா நீ எங்கே இருக்கிறாய்?


குடிமகன்களுக்கு - பியர் குடிப்ப்பது எப்படி?

நீங்கள் தீவிர காந்தியத்தை பின்பற்றினாலோ அல்லது நம்ம தமிழ் குடிதாங்கி தொண்டராவோ இருந்தால் இந்தப்பதிவை தயவு செய்து படிக்காதீர்கள்.

நம்ம ஊர் டாஸ்மாக்கில் வாங்கிய அட்டு பியராக இருந்தாலும் பரவாயில்லை, பியருக்கு முக்கியமான அம்சம் அதனுடைய சில்ன‌ஸ். அதனால், ஒரு எம்டி கிளாசை எடுத்து ஃப்ரிட்ஜில் ஃப்ரிசரில் ஒரு அரை மணி நேரமாவது போட்டு வைக்கவேண்டும்.

பின்பு நன்கு குளிரூட்டப்பட்ட பியரை அதில் ஊற்றி விட்டு சில நொடிகள் பொருத்து ஒரு சின்ன சிப் செய்யவேண்டும். பின்னர் சைவமோ அசைவமோ சைடு டிஷ்சை கொஞ்சம் சாப்பிடவும்.

நம்ம ஆட்களிடம் உள்ள பெரிய பிரச்சனையே அளவுக்கு அதிகமாக சைடு டிஷ்சை வெட்டுவது. நான் பார்த்தவரையில் சைடு டிஷ் குறைவு, சரக்கு ஜாஸ்த்தி. எண்ணைப்பண்டங்களைத் தவிற்கவும். ஓரே அடியாகத் தின்றால் குற்றாலத்தில் குளித்தால் கூட *ஞ்சு நனையாத அளவு தொந்தி பெருத்துவிடும்.

மேலை நாடுகளில் பல வகையான பியர்கள் உள்ளன. நம்ம குடிமக்கள் பாபம். சபிக்கப்பட்டவர்கள். நமது அரசு ஒருவித‌மான திணிப்பை சொல்லாமல் செயிகிறது. காசு கூடக்குடுத்தால் கூட நல்ல சரக்கு கிடைப்பதில்லை. டாஸ்மாக் கடைக்காரர் குடுப்பதுதான். நான் போன வருடம் இந்தியா வந்த போது இதை நன்கு உணர்ந்தேன். நண்பர் ஒருவர் அவர் வாங்கி வந்த பியரை மாட்டு ஒன் பாத்தோடு கம்பேர் செய்து விட்டு மூன்று பாட்டில்களை பாட்டம் அப் செய்தார்.

நான் ஒரு professional குடிகரன் இல்லை. ஆனால் ஒரு பியரை எப்படி என்ஜாய் செய்து குடிப்பது என்று தெரியும்.

அதனால் அளவோடு தின்று வளமோடு குடியுங்கள்.

குறிப்பு: குடி குடியைக் கெடுக்கும்.
                  மது நாட்டுக்கு நல்லது. வீட்டுக்குக் கேடு.

                  நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு பாட்டிலும், உங்கள் வீட்டுக்கு டீவியாகவோ, கேஸ் ஸ்டவ்வாகவோ அடுத்து வரும் அரசு தரப்போகிறது. எனவே, குற்ற உணர்ச்சி வேண்டாம். நீங்கள் தவணை முறையில் டீ.வி வாங்குவதாக நினைத்துக் கொள்ளவும்.


நான் வசிக்கும் இடத்துக்குப் பக்கத்தில் ஒரு கிருத்துவப் பள்ளி உள்ள‌து. என் மகள் அங்குதான் படிக்கிறாள். அதனுடன் சின்ன ச‌ர்ச்சும் உள்ளது. மிக அருமையான சூழல். கடந்த பிப்ரவரி மாதம்,  அந்த சர்ச்சை சேர்ந்த சில இந்தியர்கள், நம்ம குடியரசு தினத்தை கொண்டாடினார்கள். நாங்களும் சென்றோம்.

நல்ல வரவேற்பு. கனிவான உபசரிப்பு. நிகழ்ச்சி 4 மணிக்கு என்றார்கள். 5.10 க்கு ஆரம்பித்தார்கள். நான்கைந்து வெள்ளைக்கார‌ர்களும் அங்கே இருந்தனர்.  அந்த ஆடிடோரிய சுவர் முழுவதும் எழை இந்தியர்கள் போட்டோக்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இடையிடையே, தாஜ்மஹால், கேரள அரண்மனை ஒவியங்களும் இருந்தன.

நிகழ்ச்சி ஆரம்பித்த போது, ஒரு அமெரிக்கர் இந்தியா பற்றி உருகி பேசினார். அவர் கொல்கொத்தாவில் செய்த சேவைகள் இன்னபிற‌ விஷயங்களை சொன்னார்.  சரி கொடி எற்றுவார்கள் என்று நாங்கள் காத்து இருந்தோம்.

கொஞ்ச நேரத்தில், இப்போது கொடி எற்றப்படும் என்று மைக்கில் சொன்னார்கள். நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம்.

ஒரு சின்ன் கம்பில், ஒரு இந்தியக் கொடியை கட்டி ஒரு ஆள் எடுத்து வந்தான். உடனே, AR. ரஹ்மானின், மாற்றப்பட்ட இந்திய தேசிய  கீதத்தை பெரிய திரையில் காட்டினார்கள்.

நாங்கள் அதிர்ந்து போனோம். சின்ன வயதிலிருந்தே, இந்திய அரசால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தேசிய கீதத்தைக் கேட்டுவிட்டு இதை கேட்க, சற்று வித்தியாசமாக இருந்தது. நான், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் நீங்கள் செய்வது சரியான முறை இல்லை. அரசால் அனுமதிக்கப்பட்ட ஒலிநாடாவை இனிமேல் பயன் படுத்துங்கள் என்று சொன்னேன். அவர் எங்களுக்கு அது தெரியாது. அடுத்த முறை சரிசெய்கிறோம் என்றார்கள்.

என்னால் சில விஷயங்களை புரிந்துகொள்ள முடியவில்லை.

கொஞ்ச நாள் வெளிநாட்டில் வாழ்வதால், நமது சட்டதிட்டங்கள் மறந்துவிடுமா?  நமது அடுத்த தலைமுறை மக்கள், இந்திய தேசிய கீதத்திற்கு இசையமைத்தவர் யார் என்றால், ரஹ்மான் என்பார்கள். ஏற்கனவே, கே.டி குஞ்சுமோனை பாரதியாரென்று தமிழ் சினிமா சொல்லிக் கெடுத்துவிட்டது.

இந்தியா என்றால், பிச்சைகாரர்கள் நாடு என்பது எப்போது மாறும்? ஏன் நம்மைப் பற்றிமட்டும் இந்த நிலை இன்னும் உள்ளது? நம்முடைய நிலையை சினிமாகாரன் பாதி அசிங்கப்படுத்தினால், மீதியை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்கின்றார்கள். ந்மது அரசுகளும் நம்மை கையேந்தவைப்பதில் குறியாக உள்ளது.

வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது போல, நாம் ஆள‌வும் அடிமைப்படுத்தவும் படைக்கப்பட்ட ஒரு நாடு தான் இந்தியா.

அந்த நாம் என்பது யார் என்பதுதான் இப்போது மாறியுள்ளது.

ஆள‌வும் அடிமைப்படுத்தவும் ஏழைகள் தேவைப்படுகிறார்கள்.

பாதி நிகழ்ச்சியுடன் நான் கழண்டுகொள்ள, அங்கு இருந்த ஒரு பெண் ஒரு பைபிளைக் கொடுத்து அவர்தம் கொள்கையை சொல்ல ஆர்ம்பித்தார்.

விடு ஜூட்........ எனக்கு எந்த சித்தாந்தத்திலும் நம்பிக்கை இல்லை.

புள்ளி ராஜா புள்ளி விபரம்:  அமெரிக்காவில் ஒரு வருடத்தில் தயாராகும் பிளாஸ்டிக் தண்ணி பாட்டில்களைக் கொண்டு உலகை 160 தபா சுத்தி கட்டலாமாம். மெய்யாலுமே, குடிதண்ணிதாம்பா.






அப்பாடா பொன்னியின் செல்வன் தப்பித்தது


நண்பர் ஒருவர் போன் செய்து மச்சான், பொன்னியின் செல்வன் படம் டிராப் ஆயிடுச்சுன்னு சொன்னார். மூணு வாரமா சரிய தூங்கல. அதுவும் பொன்னியின் செல்வன் கதையை பலதடவை படிச்சு வந்தியத்தேவனுடன் அரிசிலாற்றங்கரையில் நடந்து... நாடி நரம்பெல்லாம் அருள்மொழிவர்மனும் ஆதித்ய கரிகாலனும் கலந்து விட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்தது. அதுவும் நம்ம மணிரத்னம் இயக்கத்தில். அப்பா... கண்ண கட்டுதே...


மணி ஒரு காலத்தில் நல்ல இயக்குனர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவரால் பொன்னியின் செல்வனை எடுக்க முடியுமா?


ஒரு சின்ன உதாரணம்:


பொன்னியின் செல்வன், பாகம் 4 ல் ஆதித்ய கரிகாலன் கடம்பூர் அரண்மனை விஜயத்தின்போது, வாயிற்காவலன் கட்டியம் கூறுவதை கல்கி ஒரு பெரிய பத்தியில் வர்ணித்திருப்பார். அது இதுவரை தமிழில் எழுதப்பட்டுள்ள 
உரைந‌டைகளில் மிகச்சிற‌ந்தது. அதற்கு இணையே இல்லை. 


இதை மணி எடுத்தால், கற்பனைசெய்து பாருங்கள்,


கட்டியங் கூறுபவன்: அவுஹ வந்துருக்காஹ..
கடம்பூர் சம்புவரையர்: யாரு
கட்டியங் கூறுபவன்: ஆதி
கடம்பூர் சம்புவரையர்: சரி வரச்சொல்லு


சினிமா ஒரு visual mediam. சில கற்பனைகளை அதன்மூலம் வடிவமைக்க முடியாது. அதுவும், மணிக்கு நெல்லை தமிழ் மேல் ஒரு தனி காதல். நினைத்துப்பாருங்கள், அருண்மொழி வர்மன் நெல்லைத் தமிழ் பேசினால் எப்படி இருக்கும். கேக்கவே சகிக்கலதானே? 


நம்ம டாகுடரு வந்தியத்தேவனா.. கொமட்டிகிட்டு வருதா? வானதி ஒரு அழகான பெண், நம்ம மணி, பம்பாய் படத்துல மண்ஷா கொய்ராலா ஓடி வருவது போல ஒரு சீன் வைப்பாரு. உடனே, நம்ம தமிழ் குடி தாங்கி டெல்லில ஹிந்தி படிக்கும் அவர் பேரன் முதல் எல்லாரையும் கூப்பிட்டு ஒரு போராட்டம் நடத்துவாரு.


நம்ம ஆஸ்கர் நாயகன் இசையில் வெட்டி வெட்டி நாலு பாட்டு இருக்கும். நம்ம மணி சம்சாரம், ஒரு அறிவு ஜீவி. அது வசனம் வேற‌ எழுதும்.  இப்போதுள்ள நடிகர்களிள், யாரும் பாதிதிரத்தோடு ஒன்றமாட்டர்கள். ஸில சமயங்களிள், சில கதைகளை, வாசகர் கற்பனைக்கே விட்டுவிடுவது நல்லது.


பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது உண்மையானால், தழ்கூறும் நல்லுலகம் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தது. இந்த நூற்றாண்டின் ஈடுயிணையற்ற செய்தி இது. 


மணி அவர்களே, உங்களுக்கென்ட்று ஒரு களம் உள்ளது. தயவஉ செய்து, இதை விட்டு விடவும்.


இந்த செய்தி வந்தவுடன் ஒரு Black Swan ஃப்புல் ஒய்ன் வாங்கி அடிச்சேன். அப்பாடா தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு.




Fast Five - விமர்சனம்

நடிகர்கள்: வின் டிசல் , பால் வாக்கர், ஜொர்டனா ப்ரீவ்ஸ்டர்
இயக்கம்: ஜஸ்டின் லீன்

இது Fast and Furious வரிசையில் 5வது படம். வழக்கமான கார் ரேசையும் கொள்ளையும் சேர்த்து ஐம்பது கேப்டன் படம் போல எடுத்துயுள்ளார்கள். வழக்கம் போல ஒரு பெரிய டிரக் அதை chase செய்து ஹிரோவை அவரது குழுவினர் காப்பாற்றுகிறார்கள். இது போன்ற முதல் காட்சி எல்லா Fast and Furious படத்திலேயும் உள்ளது.

சரி இன்னொரு கார் chase படம் என்று நினைத்தால், சட்டென்று படம் பிரேசிலுக்கு போகிறது. பின்பு வழக்கம்போல, கொஞ்சம் சென்டிமென்ட், நிறய Action என்று அதகளப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் அந்த கடைசி chasing seenல், 10 கேப்டன் படம் பார்த்த effect. ...த்தா, பாக்கிறவன் கேனயனா இருந்தா, வண்டி வண்டியா, பூ சுத்துறாங்கப்பா.

ஆனா, பிரேசிலை காட்டிய விதம் அருமை. ரியோ டி ஜெனிரியொ ரொம்ப அழகு.

Ocean 11 படம்போல கொஞ்சம் சாயல் இருக்கு. கெட்டவன் பணம், நல்ல திருடன் கதையை, கார் race-ஐ வச்சு சொல்லி இருக்கிறார்கள்.

நல்ல விஷயம்: செக்சி எல்சா பட்டாகி மற்றும் விதவிதமான கார்கள்

உபயோகம் இல்லாத தகவல் : படம் பாக்க வந்த‌தில் 95% யூத் பசங்க.

புள்ளி ராஜா கருத்து : Fast Five: வேகம் பத்தலை

Date : May 1, 2011. 
Rattle Snake is a beautiful place near Seattle, WA in North America. The ever green state has lots of places where people can go around and enjoy the green as well as snow mountains.
This has 1.7 miles trail that is steep and 1700 feet elevation. The path is muddy in few places and the records say that the places were approached by the native Indians before 3400 years. This is the water shed for the cedar river.
Once you climb up there, this small hill gives you a good view of near by town Bellevue and a big lake.     
Few observations
1. Enthusiastic crowd & encouraged others.
2. They tried to keep the place clean.
3. People are  linear and allowed others to bypass them if  are slow.
4. Even pregnant women climb up.
5. Lots of Indian people came this week.


This is my first ever blog post about a travel.