குடிமகன்களுக்கு - பியர் குடிப்ப்பது எப்படி?

நீங்கள் தீவிர காந்தியத்தை பின்பற்றினாலோ அல்லது நம்ம தமிழ் குடிதாங்கி தொண்டராவோ இருந்தால் இந்தப்பதிவை தயவு செய்து படிக்காதீர்கள்.

நம்ம ஊர் டாஸ்மாக்கில் வாங்கிய அட்டு பியராக இருந்தாலும் பரவாயில்லை, பியருக்கு முக்கியமான அம்சம் அதனுடைய சில்ன‌ஸ். அதனால், ஒரு எம்டி கிளாசை எடுத்து ஃப்ரிட்ஜில் ஃப்ரிசரில் ஒரு அரை மணி நேரமாவது போட்டு வைக்கவேண்டும்.

பின்பு நன்கு குளிரூட்டப்பட்ட பியரை அதில் ஊற்றி விட்டு சில நொடிகள் பொருத்து ஒரு சின்ன சிப் செய்யவேண்டும். பின்னர் சைவமோ அசைவமோ சைடு டிஷ்சை கொஞ்சம் சாப்பிடவும்.

நம்ம ஆட்களிடம் உள்ள பெரிய பிரச்சனையே அளவுக்கு அதிகமாக சைடு டிஷ்சை வெட்டுவது. நான் பார்த்தவரையில் சைடு டிஷ் குறைவு, சரக்கு ஜாஸ்த்தி. எண்ணைப்பண்டங்களைத் தவிற்கவும். ஓரே அடியாகத் தின்றால் குற்றாலத்தில் குளித்தால் கூட *ஞ்சு நனையாத அளவு தொந்தி பெருத்துவிடும்.

மேலை நாடுகளில் பல வகையான பியர்கள் உள்ளன. நம்ம குடிமக்கள் பாபம். சபிக்கப்பட்டவர்கள். நமது அரசு ஒருவித‌மான திணிப்பை சொல்லாமல் செயிகிறது. காசு கூடக்குடுத்தால் கூட நல்ல சரக்கு கிடைப்பதில்லை. டாஸ்மாக் கடைக்காரர் குடுப்பதுதான். நான் போன வருடம் இந்தியா வந்த போது இதை நன்கு உணர்ந்தேன். நண்பர் ஒருவர் அவர் வாங்கி வந்த பியரை மாட்டு ஒன் பாத்தோடு கம்பேர் செய்து விட்டு மூன்று பாட்டில்களை பாட்டம் அப் செய்தார்.

நான் ஒரு professional குடிகரன் இல்லை. ஆனால் ஒரு பியரை எப்படி என்ஜாய் செய்து குடிப்பது என்று தெரியும்.

அதனால் அளவோடு தின்று வளமோடு குடியுங்கள்.

குறிப்பு: குடி குடியைக் கெடுக்கும்.
                  மது நாட்டுக்கு நல்லது. வீட்டுக்குக் கேடு.

                  நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு பாட்டிலும், உங்கள் வீட்டுக்கு டீவியாகவோ, கேஸ் ஸ்டவ்வாகவோ அடுத்து வரும் அரசு தரப்போகிறது. எனவே, குற்ற உணர்ச்சி வேண்டாம். நீங்கள் தவணை முறையில் டீ.வி வாங்குவதாக நினைத்துக் கொள்ளவும்.

1 comments:

Nice. Especially, the last 7 lines are very good.

Post a Comment