நாம் வெளிப்படையான வன்முறையையோ, நடவடிக்கையையோ தவிர்த்து விடலாம் ஆனால் விரோதத்தின் சாயலை தவிர்க்க முடியாது....
                                                                                                                                                                                                   வில்லியம் ஹால்ட்ஸ்னர்

இந்தப்பதிவு தமிழ் சினிமாவின் மேல் என்னுடைய பலநாள் கோப‌ம், வயிற்றெரிச்சல். கோபத்தின் வெளிப்பாடு கோர்வையில்லாமல் இருக்கலாம்.. அனால் உண்மையில்லாமல் இல்லை.....

த‌மிழன் ஏன் தன் தலைவனை சினிமாவில் மட்டும் தேடுகிறான்.?

இந்தக் கேள்வி என் மனதை எப்போதும் அறித்துக்கொண்டே இருக்கும். நாட்டில் சினிமாக்காரனை விட்டால் வேறு யாருமே இல்லையா? அதுவும் நம்ம தமிழ்நாட்டில் ஏன் இந்த அவல நிலை?67 க்குப் பிறகு சினிமா தொடர்புடையவர்கள் தான் தமிழ் நாட்டை ஆண்டு வருகிறார்கள். நமக்கும் ஒருவித ஆட்டு மந்தை மனநிலை வந்துவிட்டது,

30 வருடங்களுக்கு முன்னால் நம்முடைய அப்பா அல்லது ஆசிரியர் நமக்கு மாடலாகத்தெரிவார்கள். இப்போது, நடிகர்கள். பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் என்று கொண்டாடப்படுகிறார்கள்.

நம்மை ஆளும் அரசுகளுக்கும் நம்முடைய அறிவை வளர்ப்பதை விட நமது அறியாமையை வளர்ப்பதுதான் குறிக்கோளாக உள்ளது. ஒரு வயசிலேயே டீ.வி பார்க்கும் குழந்தைகள் மனதில் இந்த சினிமா என்னும் நஞ்சு விதைக்கப்படுகிறது. நிலா நிலா ஓடி வா போய், என் உச்சி மண்டைல சுர்ர்ருங்குதுன்னு 3 வயசு குழந்தை பாடுது.

சினிமாவில் நல்ல சினிமா கெட்ட சினிமா என்று இல்லை. எல்லாம் ஒருவிதமானவை தான். ஒரு டெம்பிளேட் கதை,  ஒரு opening பாட்டு, ஒரு குத்துப்பாட்டு, 2 duet , ஒரு ததுவம் (அ) சோகப்பாட்டு. 5 சண்டை, கொஞ்ஜம் சிரிப்பு, சென்டிமெண்ட் இல்லாட்டி கருப்புப் ப‌ணத்தை ஹீரோ ஒழிப்பார். ( இவர்களது கருப்புப் பணத்தை யார் ஒழிப்பார்?).

அடுத்து நம்ம ஹீரோக்களது இம்சை... அதுவம் ரெண்டு படம் ஹிட்டாகிவிடால் போதும், உடனே பட்டம் வேறு. இளைய தளபதி, சின்னத்தளபதி, புர்ச்சி நடிகர், எந்த சண்டையில் போய் கலந்துகிட்டார்ன்னு தளபதி பட்டம். என்ன புரட்சி பண்ணினார்ன்னு புரட்சிப் பட்டம். அப்ப உண்மையிலேயே புரட்சி செய்தவர்களை என்னவென்று சொல்வது.
ரெண்டேபடம் ஓடினால் போதும், அடுத்த முதல்வர், பிரதமர்.. அமெரிக்க அதிபர் ஆசை வந்துவிடும் இவனுங்களுக்கு.
தெரியாமத்தான் கேட்கிறேன்... ரெண்டு operation நல்லபடியாக செய்துவிட்டு ஒரு டாக்டர் முதல்வர் கனவு காண்கிறார?
அல்லது வேறு எந்தத் துறையிலாவது இந்தப் பேராசையுள்ளதா?

டைரக்டர் கதையை சொல்லும்போதே பில்டப்போடுதான் சொல்கிறார்...

டைரக்டர் :  500 அடி உயரத்தில் நீங்க தொங்குறீங்க.. உங்க கா..ல புடிச்சு ஹீரோயின் தொங்குறாங்க...
ஹீரோ : ஹீரோயினும் தொங்குராங்களா.... அப்ப 1500 அடி உயரத்ல தொங்குர மாதிரி வைங்க...

இப்படித்தான் இவர்களது பில்டப்....... பார்க்கிர ரசிகனும், தலைவர் 1500 அடி உயரத்திலே நூல புடிச்சு தொங்குறார்னு  விசில் அடிக்கிறான். இது அறியாமை இல்லை... 50 வருடங்களாயுள்ள அடிமைத்தனம்.. ( வெள்ளைக்காரனிடமிருந்து தாத்தாக்கள் காப்பாதினாங்க... இவனுகள்டேந்து யார் காப்பாத்துவா?)

அடுத்து இயக்குனர்கள்...

ரெண்டே ரெண்டு படம் எடுத்துட்டால் போதும் ஒரு இயக்குனர் என்ன வேணும்னாலும் பேசலாம், நாட்ல நடக்காததையா நாங்க எடுக்கிறோம்ன்னு சொல்றான்.  நிஜ வாழ்கையில் எந்த ஊரில் பெண்கள் அவுத்துப்போட்டுட்டு ஆடுறாங்கன்னு  தெரியல. அதுவும் அவரது பொண்டாட்டி ஒரு அறிவு ஜீவியாக நினைத்து விட்டால் போதும், எந்த சேனல்லயாவது போய் எவன வேணும்னாலும் விமர்சிப்பார்.  அனாஅவ‌ புருசன் எடுக்கும் படம்பத்தி மட்டும் பேசவே மாட்டா. சமீபத்தில் ஒரு நல்ல நாவல் இவர்களது கொத்திலிருந்து தப்பித்தது.

நடிகைகள்.....

இவர்களைப் பற்றி எழுத புதிதாக ஒன்றுமில்லை. அவர்கள் காய்த்த மரங்கள்.. எப்போதும் கல்லடி படுபவர்கள்...

சினிமா ஒரு ஃபேன்டசி சமாச்சாரம்.  அதை நீங்கள் ஒரு போழுதுபோக்காக மட்டும் செய்தால், நாங்களும் உங்களை விமர்சிக்கப்போவதில்லை. என்னமோ நீங்கள்தான் தமிழ் கலாச்சாரத்தின் காவலர்கள் மாதிரி பேசுவதுதான் எல்லா விமர்சனத்திற்கும் காரணம். எப்போதும் ஆட்சியாளர்களின் அடிவருடியாகவே செயல்பட்டு, மக்களை உணர்ச்சிப் பூர்வமாகத்தூண்டி ஊர் சண்டையில் ஊருகாய் நக்கப்பார்ப்பது தான் உங்களது தமிழ்ச்சேவை.

காவிரி பிரச்சனையாக இருக்கட்டும், ஈழத்தமிழர் பிரச்சனையாக இருக்கட்டும்( ஒரே ஒரு விதிவிலக்கு) எவன் வீட்டில் எழவு விழுந்தாலும், அதை உங்கள் தரம் கெட்ட விளம்பரத்திற்கு பயன்படுத்திக்கொள்வீர்கள். பக்கத்து மாநிலத்தில் வாழும் தமிழர்கள் பாதுகாப்பு பற்றி கவலைப்படமாட்டீர்கள். உங்களுக்குத் தேவை, விளம்பரம்.

தமிழ் தமிழ் என்று வியாபாரம் செய்யும் நீங்கள், எத்தனை த‌மிழப் பெண்களை கதாநாயகியாக்கியிருக்கிரீர்கள்? கேட்டால் அது படைப்பாளியின் சுதந்திரம். தனக்கு தன‌க்குன்னா...  கிளை வெட்டும்...

தமிழ் தமிழ் என்று பேசும் சினிமாகாரர்கள் சினிமாவில் தமிழ் வாத்தியாரைத்தான் கேவலமாகக் காண்பிப்பார்கள். படைப்பாளிகள் சுதந்திரம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அக்ரமங்களுக்கு அளவே இல்லை.

தமிழில் பெயர் வைத்தால் தமிழ் வளந்துவிடும் என்று ஒரு மூட‌ நம்பிக்கை வேறு. ஒரு குரூப் நேட்டிவிட்டியாக படம் எடுக்கிறேன்னு கொல்ரானுங்க.  காதல், காமம், கவர்ச்சி, குடி, குட்டி இதுதான் இவர்கள் சினிமா.

அடுத்து ஆட்சி மாற்றம் வந்துவிட்டால், வேறு யாரவது தனது பதவியைத் துறக்கிறார்களா? ஆனால், சினிமா சங்கத்தலைவர்கள் மட்டும் பதவி இறங்கினார்கள். ஏன்? ஆட்சியாளர்களை எப்படியாவது அடி வருடி...***** வேண்டாம்..... கெட்ட வார்தைகள் வருகிறது.

தமிழ் அல்லது த‌மிழ் கலாச்சாரம் பற்றிப் பேச‌ சினிமாகாரன் எவ‌னுக்கும் தகுதி இல்லை.

2 comments:

Nalla Karuthu......

Mikavum sariyaana karuthu...

Ennaukum romba naala manasila irruntha qn ithu....

I think the problem starts from our living area(hall). When a family eat their dinner it is in front of the TV so unknowingly cinema becomes a part of their family.

Right from age2/3 it started to travel ...movie songs are given importance in school functions.....marriages....Thiruvillas..u name it cinema is there...so really we can't seperate it.....

so we all started to search our role models from cinema....

ponnunga kitta scene podaraha irrukatum....or getting ourselves motivated or being inspired it all comes from cinema....

so unknowingly we develop interest towards our hero's...

at tne end we couldn't able to differentiate the reel vs real life.....

Padicha namake ippadina....think abt uneducated peoples.....

Thats whay we have Vijayakanth now...maybe in 10 yes Vijay might have a key role in Politics...

Who should be blamed?

Ourselves...Families...TV.....Media....Society...it has to be a comibnation of these things...

since there are too many players....it's easy to blame others instead of taking responsibilities.....

This is my perspective....we can talk more about it...


Regarding this article.....it has become a sad part...that cinema kaaran ethu sonnalum athu periya visayam aiduthu....media kaasu paaka atha newsa eluthuraan naamalum atha padikirom.....

lets do this...can we urselves voluntarily stop following cinema or cinema related articles or even discuss it for 1 week without any impact to our daily life...then I think there is a chance for the society to change...if not it's difficult...

Cheers
Naveen

Post a Comment