அறத்துப்பால் - இல்லறவியல் - புதல்வரைப் பெறுதல்

குறள் 64:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

குறள் 66:

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

குழந்தைத்தன்மை என்பது கடவுள் தன்மையினும் மேலானது. அதை கட்டுப்படுத்தாமல் கொண்டாடக் கற்றுக்கொள்ளுங்கள்.

என் மகள் புதிதாக ஒரு ஸ்கூலில் சேர்ந்து இருக்கிறாள். அது மான்ட‌சரி யுக்தியை கடை பிடிக்கும் பள்ளி. அந்த‌ப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. பொதுவாக நான் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தவிர்த்துவிடுவேன். நேற்று நான் அந்த ஆண்டு விழாவைப் பார்த்த போது எனக்கு ஒரே நாஸ்டால்ஜிக்காக இருந்தது.

என்னுடைய பள்ளிக்காலத்தில் மூன்று அல்லது நான்கு முறை ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. ஆனால், மாணவர்களது திறமையை வெளிக் கொண்டுவருவதை விட, வந்திருக்கும் MLA அல்லது விழாத் தலைவரின் இருப்பு தான் முதன்மைப்படுத்தப்படும்.

மேலும் அங்கு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சினிமா பாட்டிற்குத்தான் குழந்தைகள் ஆடுவார்கள். என்னுடைய நண்பனின் வேட்டி மேடையில் அவிழ்ந்த காமெடியும் உண்டு. 25 வருடங்களுக்கு முன்னால், பாரதியார் பாட்டு, பாரதிதாசன் பாட்டு என்று நடனமாடுவார்கள். ச‌மீபத்திய காலங்களில்,  மாங்குயிலே,, பூங்குயிலே-ல் ஆரம்பித்து இப்போது எங்கோ சென்றுவிட்டது.

குழந்தைகள் அனைவரும் விழாத்தலைவர் வரும் வரை காத்திருப்பார்கள். சிலபேர் தூங்கிப்போவார்கள். ஆனாலும் அது ஒரு நல்ல அனுபவம். பேச்சுப் போட்டியில் டேபிளில் குத்திப் பேசினால் பரிசு குடுப்பார்கள் கைதட்டல் விழும் என்ற நம்பிக்கை எங்களுக்கு. அது உணர்ச்சிப் பூர்வமாகப் பேசும்போது செய்ய வேண்டும் என்று தெரியாது.

நேரு 1889 ஆம் வருடம் பிறந்தார் என்று டேபிளில் நங் என்று குத்துவார்கள். ஒரு முறை நண்பர் ஒருவர் பேசியபோது பக்கத்தில் டேபிள் இல்லாததால், கிழே இறங்கிப்போய் நடுவரது டேபிளில் ஓங்கிக் குத்தி நடுவரைப் பயமுறுத்தினான்.

இன்னொருவர், பேசியபோது டேபிளில் குத்த மறந்துவிட்டு, மேடைக்கு மறுபடியும் வந்து சார் ஒரு நிமிஷம், குத்த மறந்துவிட்டேன்ன்னு சொல்லி ஓங்கி ஒரே குத்து டேபிளில், பழைய டேபிள் உடைந்து எல்லொரும் சிரித்தனர்.

இந்த நினைவுகள் எல்லாம் பசுமையானவை. காலங்கள் மாறினாலும், குழந்தைகளின் மனோபாவம் மாறுவதில்லை.

நேற்று நடந்த ஆண்டு விழாவில், பாடல்களுக்கு இரண்டரை வயது முதல் ஐந்து வயது குழந்தைகள் ஆடினார்கள். டீச்சர் முன்னால் நின்று சமிக்கை செய்ய குழந்தைகள் அதை திரும்பச்செய்தனர். ஒரு சில குழதைகள் கோர்வையாக செய்யாமல், சற்று தாமதமாக ஆடியது அழகாகவும் சிரிப்பாகவும் இருந்தது. ஒரு சிலர் வாயில் கையை வைத்துக்கொண்டு நின்றனர்.

நிகழ்ச்சின்  வீடியோ பதிவு






பல சமயங்களில் பொறுமை இழந்து தவிர்த்த இந்த விழாக்களை இப்போது மட்டும் ஏன் நான் ரசிக்கிறேன்? என் குழந்தை ஆடுவதப் பார்த்த என் கண்களில் ஏன் ஆனந்தக் கண்ணீர் வருகிறது?  புரிந்தவர் யாரேனும் சொல்லுங்கள்..





1 comments:

I think we all had similar expereince...

If you notice that ingeyum cinema paatu/dance took over priority or virumbi pakka pattathu...

Post a Comment